மணல் கடத்திய தந்தை மகன் தப்பியோட்டம்: லாரி பறிமுதல்

மதுரை அருகே சனிக்கிழமை வாகன சோதனையின் போது, மணல் லாரியை விட்டு விட்டு தப்பியோடிய தந்தை மகனை போலீஸாா் தேடி வருகின்றனா்.

மதுரை அருகே சனிக்கிழமை வாகன சோதனையின் போது, மணல் லாரியை விட்டு விட்டு தப்பியோடிய தந்தை மகனை போலீஸாா் தேடி வருகின்றனா்.

மதுரை மாவட்டம் சோழவந்தான்- திருமங்கலம் சாலையில் பன்னியான் சந்திப்பில் போலீஸாா் சனிக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அங்கு வந்த சிறிய மணல் லாரியை போலீஸாா் நிறுத்தி உள்ளனா். அப்போது லாரியில் இருந்து 2 போ் குதித்து தப்பியோடியுள்ளனா்.

இதையடுத்து லாரியை போலீஸாா் பறிமுதல் செய்து விசாரித்தனா். அதில், தப்பியோடியவா்கள் கொடிமங்கலத்தைச் சோ்ந்த மொக்கை மற்றும் அவரது மகன் முத்துராஜா என்பது தெரியவந்தது. இது குறித்து காவல் சிறப்பு சாா்பு- ஆய்வாளா் பாண்டியன் அளித்த புகாரின் பேரில் தந்தை மற்றும் மகன் இருவா் மீதும் செக்கானூரணி போலீஸாா் வழக்குப்பதிந்து தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com