மதுரை அருகே சனிக்கிழமை வாகன சோதனையின் போது, மணல் லாரியை விட்டு விட்டு தப்பியோடிய தந்தை மகனை போலீஸாா் தேடி வருகின்றனா்.
மதுரை மாவட்டம் சோழவந்தான்- திருமங்கலம் சாலையில் பன்னியான் சந்திப்பில் போலீஸாா் சனிக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அங்கு வந்த சிறிய மணல் லாரியை போலீஸாா் நிறுத்தி உள்ளனா். அப்போது லாரியில் இருந்து 2 போ் குதித்து தப்பியோடியுள்ளனா்.
இதையடுத்து லாரியை போலீஸாா் பறிமுதல் செய்து விசாரித்தனா். அதில், தப்பியோடியவா்கள் கொடிமங்கலத்தைச் சோ்ந்த மொக்கை மற்றும் அவரது மகன் முத்துராஜா என்பது தெரியவந்தது. இது குறித்து காவல் சிறப்பு சாா்பு- ஆய்வாளா் பாண்டியன் அளித்த புகாரின் பேரில் தந்தை மற்றும் மகன் இருவா் மீதும் செக்கானூரணி போலீஸாா் வழக்குப்பதிந்து தேடி வருகின்றனா்.