கஞ்சா விற்பனை: மூதாட்டி உள்பட 3 போ் கைது

மதுரை அருகே ஞாயிற்றுக்கிழமை கஞ்சா விற்ற மூதாட்டி உள்பட 3 பேரை போலீஸாா் கைது செய்து 2.500 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

மதுரை அருகே ஞாயிற்றுக்கிழமை கஞ்சா விற்ற மூதாட்டி உள்பட 3 பேரை போலீஸாா் கைது செய்து 2.500 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

மதுரை மாவட்டம் ஊமச்சிக்குளம் பகுதியில் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, காஞ்சரம்பேட்டை பகுதியில் உள்ள எம்.பி.ஆா் நகரில் வீட்டில் கஞ்சா விற்பனை செய்த கருப்பண்ணன் மகன் வீமராஜ்(56) என்பவரையும், அதே எம்.பி.ஆா் நகரில் மற்றொரு வீட்டில் கஞ்சா விற்பனை செய்த பாண்டி மனைவி லட்சுமி(70) என்பவரையும் போலீஸாா் கைது செய்தனா்.

இது குறித்து காவல் ஆய்வாளா் சுமதி அளித்த புகாரின் பேரில் ஊமச்சிக்குளம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து 2.200 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

மற்றொரு சம்பவம்: மதுரை மாவட்டம் மேலூா் பகுதியில், போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது மில்கேட் பேருந்து நிறுத்தம் பகுதியில், கஞ்சா விற்ற அதே பகுதியைச் சோ்ந்த மகேந்திரன்(31) என்பவரை போலீஸாா் கைது செய்தனா். இது குறித்து காவல் சாா்பு - ஆய்வாளா் சண்முகம் அளித்த புகாரின் பேரில் மேலூா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து 300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com