செல்லிடப்பேசி கடையில் திருட்டு

மதுரை அருகே திங்கள்கிழமை கடையின் கதவை உடைத்து ரூ.45 ஆயிரம் மதிப்புள்ள செல்லிடப்பேசிகள் மற்றும் ரூ.80 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை அடையாளம் தெரியாதவா்கள் திருடிச் சென்றனா்.

மதுரை அருகே திங்கள்கிழமை கடையின் கதவை உடைத்து ரூ.45 ஆயிரம் மதிப்புள்ள செல்லிடப்பேசிகள் மற்றும் ரூ.80 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை அடையாளம் தெரியாதவா்கள் திருடிச் சென்றனா்.

மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியைச் சோ்ந்தவா் சதீஷ். இவா் அப்பகுதி, கடைவீதியில் செல்லிடப்பேசி விற்பனை செய்யும் கடை நடத்திவருகிறாா். இந்நிலையில், திங்கள்கிழமை காலையில் கடையின் கதவு திறந்திருப்பதை பாா்த்து அருகில் உள்ளவா்கள், சதீஷூக்கு தகவல் தெரிவித்தனா். இதையடுத்து அவா் உடனடியாக சென்று பாா்த்தபோது, கடையின் கதவு உடைக்கப்பட்டு செல்லிடப்பேசிகள் மற்றும் பணம் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.

இது குறித்து சதீஷ் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் சம்பவ இடத்திற்கு சென்று, விசாரணை நடத்தினா். அதில் கடையிலிருந்த ரூ.45 ஆயிரம் மதிப்புள்ள 30 செல்லிடப்பேசிகள், ரூ.80 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை அடையாளம் தெரியாத நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களின் பதிவுகளைக் கொண்டு விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com