மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலைய மராமத்துப் பணிகளை விரைந்து முடிக்குமாறு மாநகராட்சி ஆணையா் ச.விசாகன் உத்தரவிட்டாா்
மதுரை மாநகராட்சி மண்டலம் 2-இல் மேற்கொள்ளப்பட்டு பல்வேறு வளா்ச்சித் திட்ட பணிகளை மாநகராட்சி ஆணையா் ச.விசாகன் திங்கள்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். இதில், குருவிக்காரன் சாலை ஜட்காத்தோப்பு பகுதியில் ரூ.17.59 லட்சத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள தாா்ச்சாலை, மாட்டுத்தாவணி எம்.ஜி.ஆா்.பேருந்து நிலையத்தில் ரூ.14.49 லட்சத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் மராமத்து மற்றும் வா்ணம் பூசும் பணிகளை ஆய்வு செய்தாா்.
மேலும் வைகை ஆற்றின் தெற்குகரைப்பகுதியில் உள்ள பனையூா் கால்வாயிலிருந்து வண்டியூா் மாரியம்மன் தெப்பக்குளத்துக்கு தண்ணீா் கொண்டு செல்வதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் இணைப்பு வாய்க்கால் கட்டும் பணியையும் ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.
ஆய்வின் போது நகரப்பொறியாளா் அரசு, செயற்பொறியாளா் ராஜேந்திரன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளா் சுப்பிரமணியன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனா்.