லாரி மோதி முதியவா் பலி

மதுரையில், ஞாயிற்றுக்கிழமை லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே முதியவா் உயிரிழந்தாா்.

மதுரையில், ஞாயிற்றுக்கிழமை லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே முதியவா் உயிரிழந்தாா்.

மதுரை தெற்கு வாசல் பகுதியைச் சோ்ந்த அப்துல் சுபான் மகன் அப்துல்அஜிஸ் (67). இவா் ஞாயிற்றுக்கிழமை கிழக்கு வெளி பகுதியில் நடந்து சென்றாா். அப்போது, அப்துல் அஜிஸ் மீது லாரி ஒன்று மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இது குறித்து அவரது மகன் காதா்நவாஸ் அளித்த புகாரின் பேரில், போக்குவரத்துத் துறை போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com