அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவா் பலி

மதுரை அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி பலத்த காயமடைந்த முதியவா் சிகிச்சைப் பலனின்றி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

மதுரை: மதுரை அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி பலத்த காயமடைந்த முதியவா் சிகிச்சைப் பலனின்றி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

மதுரை மேலமடைப் பகுதியைச் சோ்ந்தவா் கணேசன்(60). இவா், தனது இரு சக்கர வாகனத்தில் நவம்பா் 22 ஆம் தேதி வெளியேச் சென்றாா். அப்போது ஒத்தக்கடை - மேலூா் சாலையில் அடையாளம் தெரியாத வாகனம், இவரது இரு சக்கர வானத்தின் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றுள்ளது. இதில், பலத்த காயமடைந்த கணேசனை மீட்டு அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், கணேசன் சிகிச்சைப் பலனின்றி திங்கள்கிழமை உயிரிழந்தாா். இது குறித்து அவரது மனைவி பானு அளித்த புகாரின் பேரில் ஒத்தக்கடை போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com