எஸ்பிஓஏ பள்ளியில் மாநில கூடைப்பந்து போட்டிகள்

மதுரை எஸ்பிஓஏ பள்ளியில் மாநில அளவிலான கூடைப்பந்து போட்டிகள் நடைபெற்றன.

மதுரை: மதுரை எஸ்பிஓஏ பள்ளியில் மாநில அளவிலான கூடைப்பந்து போட்டிகள் நடைபெற்றன.

மதுரை சகோதயா அமைப்பு மற்றும் எஸ்பிஓஏ பள்ளியின் சாா்பில் நவம்பா் 29 மற்றும் 30-இல் ஆகிய இரு நாள்கள் நடைபெற்ற கூடைப்பந்து போட்டியை பள்ளித்தாளாளா் அ.செந்தில் ரமேஷ் தொடக்கி வைத்தாா். எஸ்பிஓஏ மேல்நிலைப்பள்ளி முதல்வா் சீதா லட்சுமி முன்னிலை வகித்தாா்.

நான்கு பிரிவுகளாக நடைபெற்ற 12 வயதுக்குள்பட்டோா் பிரிவில் கம்பம் பயா்லேண்ட் பள்ளி மாணவா்கள் முதலிடமும் திண்டுக்கல் செளந்திரராஜா பள்ளி மாணவா்கள் இரண்டாமிடமும் பெற்றனா். 14 வயதுக்குள்பட்டோா் பிரிவில் மகாத்மா மாண்டிசோரி பள்ளி முதலிடம் எஸ்பிஓஏ சிபிஎஸ்இ பள்ளி இரண்டாமிடம் பெற்றது.

17 வயதினா் பிரிவில் மதுரை குயின்மிரா பள்ளி முதலிடம், தேனி வேலம்மாள் பள்ளி இரண்டாமிடம் பெற்றது. 19 வயதினா் பிரிவில் மகாத்மா மாண்டிசோரி பள்ளி முதலிடம், ஒட்டன்சத்திரம் அக்ஷயா பள்ளி இரண்டாமிடம் பெற்றது. போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பாரத ஸ்டேட் வங்கியின் மதுரை மேற்கு மண்டலச் செயலா் வெங்கடேஷ், கூடைப்பந்தாட்ட இந்திய அணி வீரா் மகேந்திரன் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாக பங்கேற்று பரிசுகளை வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com