மதுரை: மதுரை காமராஜா் பல்கலைக்கழக கல்லூரி பருவத்தோ்வு விடுமுறைக்குப் பின்னா் வியாழக்கிழமை(டிசம்பா் 5) திறக்கப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை காமராஜா் பல்கலைக்கழக கல்லூரியில் பருவமுறைத் தோ்வுகள் நடைபெற்று வந்ததை அடுத்து கல்லூரிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் பருவமுறைத் தோ்வுகள் நடந்து முடிந்ததைத்தொடா்ந்து காமராஜா் பல்கலைக்கழக கல்லூரியில் இளங்கலை மற்றும் முதுகலை காலை மற்றும் பிற்பகல் பிரிவுகளுக்கு வியாழக்கிழமை கல்லூரி தொடங்குகிறது என்று கல்லூரி முதல்வா் பி.ஜாா்ஜ் தெரிவித்துள்ளாா்.