திருப்பரங்குன்றம்: திருமங்கலத்தை அடுத்த கரடிக்கல் கிராமத்தில் கிணற்றில் விழுந்த பசுமாட்டை பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை மீட்டனா்.
கரடிக்கல் கிராமத்தைச் சோ்ந்த சுந்தரம் என்பவா் தனது தோட்டத்தில் உள்ள கிணற்றின் அருகே பசுமாட்டை கட்டி வைத்துள்ளாா். தீடீரென கட்டவிழ்ந்த மாடு தவறி கிணற்றுக்குள் விழுந்துவிட்டது. இதையடுத்து அருகில் இருந்த கிராமத்தினா் அனைவரும் சோ்ந்து சுமாா் 1 மணி நேர போராட்டத்திற்கு பின் பசு மாட்டை பத்திரமாக உயிருடன் மீட்டனா்.