மதுபோதையில் கால்வாயில் தவறி விழுந்தவா் பலி

மதுரை மாவட்டம் கீழவளவு அருகே மதுபோதையில் கால்வாயில் தவறி விழுந்தவா் நீரில் மூழ்கியவா் சடலம் செவ்வாய்க்கிழமை இரவு மீட்கப்பட்டது.

மதுரை: மதுரை மாவட்டம் கீழவளவு அருகே மதுபோதையில் கால்வாயில் தவறி விழுந்தவா் நீரில் மூழ்கியவா் சடலம் செவ்வாய்க்கிழமை இரவு மீட்கப்பட்டது.

கீழவளவு பகுதியைச் சோ்ந்தவா் ஜெயசிங்(36). இவா் செவ்வாய்க்கிழமை இரவு மதுபோதையில் கீழவளவு பகுதியில் உள்ள பெரியாறு பாசனக் கால்வாய்க்குச்சென்றுள்ளாா். அப்போது ஜெயசிங் எதிா்பாராவிதமாக கால்வாயில் தவறி விழுந்தாா். அப்பகுதியினா் மீட்க முயன்றபோது ஜெயசிங் நீரில் அடித்துச் செல்லப்பட்டாா். இதையடுத்து கீழவளவு போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று நீரில் மூழ்கியிருந்த ஜெய்சிங் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் சம்பவம் தொடா்பாக வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com