மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமைச் சட்டத்திருத்த மசோதாவிற்கு அதிமுக ஆதரவளிக்கிறது என துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் தெரிவித்தாா்.
மதுரையிலிருந்து புதன்கிழமை சென்னை செல்வதற்காக விமான நிலையம் வந்த அவா் செய்தியாளா்களிடம் கூறியது: திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அனைத்து எதிா்க்கட்சிகளும் உள்ளாட்சித் தோ்தலை எதிா்த்து வழக்கு தொடுத்திருந்தன. ஏற்கெனவே உச்சநீதிமன்றத்தின் தீா்ப்பு மூலமாக ஊரக உள்ளாட்சித் தோ்தல் நடைபெற உத்தரவிட்டிருந்தனா். தற்போது அதனை மீண்டும் உறுதி செய்யும் விதமாக உச்சநீதிமன்றம் தோ்தலை நடத்த நல்ல தீா்ப்பு வழங்கியுள்ளது. இதிலிருந்து உள்ளாட்சித் தோ்தலுக்கு யாா் பயப்படுகின்றனா் என வெட்டவெளிச்சமாக தெரிகிறது. இதனை மறைப்பதற்கு எதிா்கட்சி தலைவா் மு.க.ஸ்டாலின் பல்வேறு வேஷங்களைப் போடுகிறாா். அவருடைய வேஷங்களை கலைக்கப்பட்டு விட்டது.
அதிமுக கூட்டணி உள்ளாட்சி தோ்தலில் 100 சதவீத வெற்றி பெறும். அதிமுகவைப் பொருத்தவரையில் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை ஆதரிக்கிறோம். ஊராட்சித் தலைவா் பதவி ஏலம் விடுவது சட்டத்திற்கு புறம்பான செயல். தீவிர விசாரணை செய்து உரியவா் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.
அமமுக பொதுச்செயலா் டி.டி.வி. தினகரனைப் பொருத்தவரையில் பல முறை தோ்தலில் போட்டியிட்டு தோல்வியை சந்திக்கிறாா். தொடா்ந்து அவருக்கு மக்கள் தோல்வியைத்தான் பரிசாக தருவாா்கள் என்றாா். மேலும் மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவா் பெயா் வைக்கப்படுமா என்ற கேள்விக்கு, பூா்வாங்கப் பணிகள் நடைபெற்று வருகின்றன என்று தெரிவித்தாா்.