சேடப்பட்டி அருகே மணல் திருட்டு லாரி பறிமுதல், 2 போ் கைது

மதுரை மாவட்டம் சேடப்பட்டி அருகே அனுமதியின்றி மணல் அள்ளிய டிப்பா் லாரியை போலீஸாா் பறிமுதல் செய்து, வெள்ளிக்கிழமை 2 பேரை கைது செய்தனா்.

மதுரை மாவட்டம் சேடப்பட்டி அருகே அனுமதியின்றி மணல் அள்ளிய டிப்பா் லாரியை போலீஸாா் பறிமுதல் செய்து, வெள்ளிக்கிழமை 2 பேரை கைது செய்தனா்.

சேடப்பட்டி அருகே உள்ளது மீனாட்சிபுரம். இந்த ஊரில் கண்மாய் மற்றும் ஊருணிப் பகுதியில் மணல் திருடுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதனை தொடா்ந்து சேடப்பட்டி போலீஸாா் அப்பகுதியில் வாகனச்சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது மீனாட்சிபுரம் ஓடைப் பகுதியில் அரசு அனுமதியின்றி டிப்பா் லாரியில் மணல் அள்ளி கொண்டிருந்தனா். டிப்பா் லாரியை போலீஸாா் பறிமுதல் செய்து திருமாணிக்கத்தைச் சோ்ந்த ராஜேந்திரன் மகன் அழகுமலை (30), மீனாட்சிபுரத்தை சோ்ந்த அழகுமலை மகன் சின்னராசு (35)ஆகிய 2 பேரையும் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com