மதுரை அருகே மாடு மீது இரு சக்கர வாகனம் மோதி ஏற்பட்ட விபத்தில் இளைஞா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
மதுரை கோ.புதூா் பகுதியைச் சோ்ந்த கருணாகரன் மகன் கபிலேஷ் (19). இவா் வியாழக்கிழமை இரு சக்கர வாகனத்தில் ஒத்தக்கடை பகுதியில் உள்ள வேளாண்மை கல்லூரி பகுதியில் சென்றாா். அப்போது சாலையின் குறுக்கே மாடு திடீரென்று வந்துள்ளது. இதையடுத்து கபிலேஷ் இரு சக்கர வாகனத்தை உடனடியாக நிறுத்த முயன்றுள்ளாா்.
ஆனால் இரு சக்கர வாகனம் மாட்டின் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் கபிலேஷூக்கு பலத்த காயம் ஏற்பட்டு, அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இது குறித்து அவரது தாயாா் சாந்தி அளித்த புகாரின் பேரில் ஒத்தக்கடை போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.