மதுரை மாநகராட்சியின் 41, 42, 43 ஆவது வார்டுகளுக்கான சிறப்பு முகாம் சிங்கராயர் காலனி மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் வியாழக்கிழமை (பிப்ரவரி 14) காலை 10 முதல் பகல் 1 மணி வரை நடைபெறுகிறது.
வார்டு 41 நரிமேடு, வார்டு 42 சொக்கிக்குளம், வார்டு 43 தல்லாகுளம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் குடிநீர் இணைப்பு, பாதாளச் சாக்கடை இணைப்பு, புதிய வரிவிதிப்பு, பெயர் மாற்றம், காலிமனை வரி விதிப்பு, தொழில் உரிமம் பெறுவது, புதுப்பித்தல், தொழில் வரி விதிப்பு ஆகியவற்றுக்கு உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து உடனுக்குடன் உத்தரவுகளைப் பெறலாம் என மாநகராட்சி ஆணையர் அனீஷ் சேகர் தெரிவித்துள்ளார்.