மதுரை ஆண்டாள்புரம் கலைமகள் கல்வி மையத்தில் வீட்டா ஆங்கிலப் பேச்சுப் பயிற்சி மையத்தின் புதிய கிளை புதன்கிழமை திறந்து வைக்கப்பட்டது.
கலைமகள் கல்வி மைய நிறுவனர் செல்வி சந்திரமோகன், இம்மையத்தைத் திறந்து வைத்தார். மதுரைக் கல்லூரி ஓய்வு பெற்ற பேராசிரியர் ஆர்.நடேசன், செளராஷ்டிரா கல்வியியல் கல்லூரி முதல்வர் ஜே.பிரபாகரன், பேராசிரியர் தெய்வம், வீட்டா மண்டல மேலாளர் விஜய் ஆனந்த் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
புதிய வகுப்புகள் பிப்ரவரி 18 ஆம் தேதி முதல் நடைபெறும் என கலைமகள் கல்வி மைய நிர்வாக இயக்குநர் சி.குழந்தைவேல் தெரிவித்துள்ளார்.