மதுரை விமான நிலையம் விரிவாக்கம்: மத்திய அமைச்சர் இன்று தொடக்கி வைக்கிறார்

மதுரை விமான நிலையத்தில் புதிதாக விரிவாக்கம் செய்யப்பட்ட பணிகளை வெள்ளிக்கிழமை காணொலிக் காட்சி

மதுரை விமான நிலையத்தில் புதிதாக விரிவாக்கம் செய்யப்பட்ட பணிகளை வெள்ளிக்கிழமை காணொலிக் காட்சி மூலம் மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் சுரேஷ்பிரபு தொடக்கி வைக்கிறார்.   
 மதுரை விமான நிலையத்தில் 5 விமானங்கள் நிறுத்தும் வகையில் கூடுதலாக 1 ஏரோ பிரிட்ஜ் அமைக்கும் பணிகள் நடைபெற்றன. இப்பணிகள் நிறைவு பெற்றுள்ள நிலையில் வெள்ளிக்கிழமை  பயன்பாட்டுக்கு கொண்டவரப்பட உள்ளது. இதனை மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சர்  சுரேஷ்பிரபு காணொலிக்காட்சி மூலம் வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு தொடக்கி வைக்க உள்ளார். மதுரை விமான  நிலையத்தில் நடைபெறும் தொடக்க விழாவில் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்க உள்ளார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விமான நிலைய இயக்குநர் வி.வி.ராவ் செய்து வருகிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com