உறங்கான்பட்டியில் மஞ்சு விரட்டு

மேலூர் அருகே உள்ள உறங்கான்பட்டியில் வெள்ளிக்கிழமை மஞ்சுவிரட்டு  நடைபெற்றது.

மேலூர் அருகே உள்ள உறங்கான்பட்டியில் வெள்ளிக்கிழமை மஞ்சுவிரட்டு  நடைபெற்றது.
 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆண்டுதோறும் மார்கழி கடைசி வெள்ளிக்கிழமை  உறங்கான்பட்டி கிராமப் பொதுமக்கள் அனைவரும் சேர்ந்து, நாட்டார்முக்தி அய்யனார் கோயிலில் பொங்கல் வைத்து மஞ்சுவிரட்டு நடத்துவது வழக்கம். 
அதேபோன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற மஞ்சுவிரட்டில், சிவகங்கை மற்றும் மதுரை மாவட்டங்களில் இருந்து நூற்றுக்கு மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. காளைகளைப் பிடிக்க முயன்ற 7 பேர் லேசான காயமடைந்தனர். ஆயிரக்கணக்கானோர் மஞ்சுவிரட்டை கண்டுகளித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com