திமுகவை ஏற்க மக்கள் தயாராக இல்லை: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

மத்தியில் கூட்டணியில் இருந்தும் தமிழகத்திற்கு எந்த ஒரு திட்டமும் கொண்டு வராத திமுகவை மக்கள் ஏற்கத் தயாராக

மத்தியில் கூட்டணியில் இருந்தும் தமிழகத்திற்கு எந்த ஒரு திட்டமும் கொண்டு வராத திமுகவை மக்கள் ஏற்கத் தயாராக இல்லை என வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.   
      திருமங்கலம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட வடக்கம்பட்டி, வில்லூர், மரவப்பட்டி, போத்தநதி, ஆவல்சூரன்பட்டி, கே.வெள்ளாங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் 12,250 நபர்களுக்கு பொங்கல் தொகுப்பு மற்றும் ரூ.1000 வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 
   இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் எஸ்.நடராஜன் தலைமை வகித்தார். கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ராஜேஷ் முன்னிலை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் குணாளன் வரவேற்றார். பொது மக்களுக்கு பொங்கல் பரிசினை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கிப் பேசியது:
    பொங்கல் பரிசுத்திட்டம் மக்களுக்கு கிடைக்கக்கூடாது என்ற நோக்கில் திமுக தூண்டுதலின் பேரில், அக்கட்சியைச் சேர்ந்த ஒருவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதனை முறியடிக்கும் வகையில் தமிழக அரசு நீதிமன்றத்தில் எடுத்துரைத்து, அடித்தட்டு மக்களுக்கு பொங்கல் பரிசு கிடைக்க வழிவகை செய்துள்ளது.
 திமுகவின் ஊராட்சி சபைக்கூட்டத்தில் மக்கள் வருவார்கள் என்று அக்கட்சியினர் எதிர்பார்த்தனர். ஆனால் திமுகவின் ஊராட்சி சபைக்கூட்டங்களை பொதுமக்கள் புறக்கணித்து வருகின்றனர். 
 திமுகவை ஏற்றுக்கொள்ள மக்கள் தயாராக இல்லை. மத்தியில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்திருந்த திமுக, தமிழகத்திற்கு எந்த ஒரு சிறப்பான திட்டங்களையும் கொண்டுவரவில்லை என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com