மேலூர் நீதிமன்ற வளாகத்தில் வெள்ளிக்கிழமை பொங்கல் விழா நடைபெற்றது.
மாவட்ட உரிமையியல் நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற விழாவில் நீதிபதிகள் முன்னிலையில் வழக்குரைஞர்களும் நீதிமன்ற ஊழியர்களும் பொங்கல் வைத்து வழிபட்டனர். இந்நிகழ்ச்சியில், சார்பு நீதிமன்ற நீதிபதி சரவணன், உரிமையியல் நீதிமன்ற நீதிபதி சுரேஷ், குற்றவியல் நீதித்துறை நடுவர் பழனிவேலு ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதே போன்று, மேலூர் அரசு மருத்துவமனையில், மருத்துவமனை அலுவலர் ஜெயந்தி முன்னிலையில் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் அலுவலர்கள் பொங்கல் வைத்து கொண்டாடினர்.