வாகன விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் சாவு

மதுரை மாவட்டம் பாலமேடு அருகே இரு சக்கர வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் வெள்ளிக்கிழமை இறந்தார்.

மதுரை மாவட்டம் பாலமேடு அருகே இரு சக்கர வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் வெள்ளிக்கிழமை இறந்தார்.
 மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள சின்ன ஊர்சேரியைச் சேர்ந்தவர் தெய்வேந்திரன்(48). தனியார் நிறுவன ஊழியரான தெய்வேந்திரன் இரு சக்கர வாகனத்தில் பாலமேட்டுக்கு வியாழக்கிழமை இரவு சென்றுள்ளார். அப்போது எதிரே வந்த இரு சக்கர வாகனம் மோதியதில் தெய்வேந்திரன் பலத்த காயமடைந்தார். பின்னர், அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்பாக அவரது மகன் கார்த்திக்குமார் அளித்த புகாரின்பேரில் அலங்காநல்லூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com