திருப்பரங்குன்றம் தென்கால் மற்றும் நிலையூர் கண்மாய்களை, நீதிபதி தலைமையிலான குழுவினர் சனிக்கிழமை ஆய்வு செய்தனர்.
மதுரை மாவட்டத்தில் கண்மாய்ப் பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பாக, நீதிபதி வீரகதிரவன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.
அதையடுத்து, தென்கால், நிலையூர் கண்மாய் உள்ளிட்ட திருப்பரங்குன்றம் பகுதியில் உள்ள கண்மாய் ஆக்கிரமிப்புகளை, வருவாய்த் துறையினர் மற்றும் பொதுப்பணித் துறையினர் அகற்றினர்.
இதை, நீதிபதி வீரகதிரவன் தலைமையிலான கண்காணிப்புக் குழுவினர் ஆய்வு செய்தனர். அவர்களுடன், கோட்டாட்சியர் அரவிந்தன், வட்டாட்சியர் சுரேஷ், செயற்பொறியாளர் சுப்பிரமணியன், உதவிப் பொறியாளர் செல்வம், உதவிப் பொறியாளர் மோகன்குமார், பணி ஆய்வர் வரதன் உள்ளிட்டோர் சென்றிருந்தனர்.