மதுரை மாவட்டம், பேரையூர் அருகே என். மீனாட்சிபுரத்தைச் சேர்ந்தவர் கருப்பசாமி. இவர், வியாழக்கிழமை தனது வீட்டைப் பூட்டிவிட்டு, சாவியை வீட்டின் ஜன்னல் அருகே மறைத்து வைத்து வெளியே சென்றுவிட்டாராம். இதையறிந்த மர்ம நபர்கள், வீட்டின் கதவைத் திறந்து உள்ளே புகுந்து 10 பவுன் நகைகளைத் திருடிச் சென்றுவிட்டனர்.
இது குறித்து கருப்பசாமி அளித்த புகாரின்பேரில், டி.கல்லுப்பட்டி போலீஸார் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.