மேலூர், கொட்டாம்பட்டியில் 363 பேருக்கு தாலிக்குத் தங்கம்

மேலூர், கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியங்களில் 363 பேருக்கு தாலிக்குத் தங்கம் வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.


மேலூர், கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியங்களில் 363 பேருக்கு தாலிக்குத் தங்கம் வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் பிளஸ் 2 முடித்த 108 பேருக்கு தலா 8 கிராம் தங்கம், ரூ. 25,000 ரொக்கம், பட்டதாரிப் பெண்கள் 33 பேருக்கு தலா 8 கிராம் தங்கம், ரூ.50,000 ரொக்கம் வழங்கப்பட்டது. 
இதே போல், மேலூர் ஊராட்சி ஒன்றியத்தில் பட்டதாரிப் பெண்கள், பிளஸ் 2 முடித்த பெண்களுக்கு தாலிக்குத் தங்கம் மற்றும் ரொக்கம் வழங்கப்பட்டது. 
மொத்தம் 363 பேருக்கு தாலிக்குத் தங்கம் மற்றும் ரொக்கம் வழங்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 
நிகழ்ச்சியில், மேலூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் பெரியபுள்ளான் என்ற செல்வம், மேலூர் வட்டாட்சியர் சரவணன், ஊராட்சி ஒன்றிய வட்டார விரிவாக்க அலுவலர் ரத்தினகலாவதி, கொட்டாம்பட்டி ஒன்றிய வட்டார விரிவாக்க அலுவலர் பாலசந்தர், மேலூர் ஒன்றிய அதிமுக செயலர் பொன்னுச்சாமி, கொட்டாம்பட்டி ஒன்றியச் செயலர் வெற்றிச்செழியன் உள்ளிட்ட அதிமுகவினர் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com