திருவள்ளுவர் தினம்: இறைச்சி விற்பனைக்குத் தடை

திருவள்ளுவர் தினத்தையொட்டி மதுரை  நகரில் ஜனவரி 16-ஆம் தேதி இறைச்சி விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

திருவள்ளுவர் தினத்தையொட்டி மதுரை  நகரில் ஜனவரி 16-ஆம் தேதி இறைச்சி விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளுவர் தினம் வரும் புதன்கிழமை (ஜன. 16) கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி மதுரை மாநகராட்சி எல்லைக்குள்பட்ட பகுதிகளில் ஆடு, மாடு, பன்றி, கோழி போன்றவற்றின் இறைச்சி விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 
இதை முன்னிட்டு திருவள்ளுவர் தினத்தன்று ஆடு, மாடு, கோழி, பன்றி போன்ற உயிரினங்களை வதை செய்வது, கடைகளை திறந்து விற்பனை செய்வது போன்றவற்றில் ஈடுபடக்கூடாது. 
அவ்வாறு மீறும்பட்சத்தில் கடைகளில் உள்ள இறைச்சி பறிமுதல் செய்யப்படுவதுடன் கடும் நடவடிக்கையும் எடுக்கப்படும் என்று மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com