மதுரை மாவட்டம் தும்பைப்பட்டியில் வீரகாளியம்மன் கோயிலில் பொங்கல் விழா புதன்கிழமை நடைபெற்றது.
விழாவையொட்டி கோயில் காளைக்கு முஸ்லிம் மக்கள் வேஷ்டி துண்டு மாலைகள் அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வு தும்பைப்பட்டியில் ஹிந்து - முஸ்லிம் சமய நல்லிணக்க ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது.
பதினெட்டாங்குடியில் மஞ்சுவிரட்டு: மேலூர் அருகே உள்ள பதினெட்டாங்குடி கிராமத்தில் பட்டத்தரசி அம்மன்கோயில் பொங்கல் வைபவத்தையொட்டி மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. இதில், நூற்றுக்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. அவற்றை இளைஞர்கள் அடக்கினர்.