தென் மண்டல ஆயுள் காப்பீட்டு ஊழியர் கூட்டமைப்பின் முன்னாள் துணைத் தலைவர் இ.எம்.ஜோசப் (75) ஞாயிற்றுக்கிழமை காலமானார்.
தொழிற்சங்கத் தலைவரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாவட்டச் செயற்குழு உறுப்பினருமான இவர் உடல்நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் சிகிச்சைப் பலனின்றி ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணியளவில் காலமானார்.அவருக்கு மேரி மைக்கேல் ரோஸ் என்ற மனைவியும் ஆனி கோல்டு நிர்மலா, ஜோஸ்பின் ஜெசிந்தா ராணி, மார்ட்டின் ரத்தின ஷர்மிளா என்ற மூன்று மகள்கள் உள்ளனர்.
இ.எம்.ஜோசப் இறுதிச் சடங்கு திங்கள்கிழமை காலை 10 மணிக்கு கூடல்நகர் சாந்தி நகரில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறுகிறது. தொடர்புக்கு 9488055385.