படுகொலை செய்யப்பட்ட 7 பேர் நினைவிடத்தில் தொல்.திருமாவளவன் அஞ்சலி

மேலவளவு ஊராட்சித் தலைவர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற முருகேசன் உள்ளிட்ட 7 பேர்

மேலவளவு ஊராட்சித் தலைவர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற முருகேசன் உள்ளிட்ட 7 பேர் படுகொலை செய்யப்பட்டதன் 22-ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி அவர்களது நினைவிடத்தில் ஞாயிற்றுக்கிழமை தொல். திருமாவளவன் மலர் வளையம்வைத்து அஞ்சலி செலுத்தினார். 
அப்போது நடைபெற்ற கூட்டத்துக்கு மதுரை மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி செயலர் அலங்கை செல்வராசு தலைமை வகித்தார். 
இதில் தொல். திருமாவளவன் பேசினார். இதைத் தொடர்ந்து, மேலவளவு ஊராட்சித்தலைவர் முருகேசன் உள்ளிட்ட 7 பேர் குடும்பத்தினருக்கு புதிய ஆடைகளை அவர் வழங்கினார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் அஞ்சலி: மதுரை மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் மற்றும் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத் தலைவர் என்.பழனிச்சாமி மற்றும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி நிர்வாகிகள் விடுதலைக் களத்தில் அஞ்சலி செலுத்தினர். 
கூட்டத்துக்கு கம்யூனிஸ்ட் கட்சி மேலூர் தாலுகா செயலர் எம்.கண்ணன் தலைமை வகித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com