மதுரை யா.ஒத்தக்கடை அருகேயுள்ள திருமோகூர் காளமேகப்பெருமாள் கோயிலில் மஹா சுதர்ஸன ஜயந்தியையொட்டி புதன்கிழமை சர்வ அலங்காரத்தில் சுதர்ஸன சக்கரத்தாழ்வார் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
மகாவிஷ்ணு சக்கரத்தாழ்வாராக அவதரித்த திருநட்சத்திர தினத்தையொட்டி காளமேகப் பெருமாள் கோயிலில் சக்கரத்தாழ்வார் சன்னிதியில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. ஹோமம் மற்றும்
சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர்.