மதுரையில் நாளை தனியார் வேலை வாய்ப்பு முகாம்

மதுரை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் சார்பில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (ஜூலை 12) நடைபெற உள்ளது.

மதுரை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் சார்பில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (ஜூலை 12) நடைபெற உள்ளது.
மதுரை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம், தொழில் மற்றும் செயல் வேலை வாய்ப்பு கிளை அலுவலகமும் இணைந்து வரும் வெள்ளிக்கிழமை வேலை வாய்ப்பு முகாமை நடத்துகின்றன.  இந்த முகாமில் தனியார் முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு வேலை நாடும் இளைஞர்களின் கல்வித்தகுதிக்கேற்ப ஆள்களை தேர்வு செய்கின்றன. முகாமில் பத்தாம் வகுப்பு முதல் முதுகலை பட்டப்படிப்பு வரை முடிந்த வேலை நாடுநர்கள், ஐடிஐ மற்றும் டிப்ளமோ படித்த வேலை நாடுநர்கள் பங்கேற்று தங்களது தகுதிக்கேற்ப தனியார் துறை நிறுவனங்களில் பணி நியமனம் பெற்றுக்கொள்ளலாம். முகாமில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள வேலை நாடுநர்கள் தங்களது கல்விச்சான்றிதழ்கள், குடும்ப அட்டை, ஆதார் அட்டை மற்றும் புகைப்படத்துடன் வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மதுரை கோ.புதூரில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு நேரில் வந்து வேலை வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். தனியார் நிறுவனங்களில் வேலை பெறுவதால் வேலை வாய்ப்பு அலுவலக பதிவு எவ்விதத்திலும் பாதிக்கப்படாது என்று வேலை வாய்ப்பு அலுவலக துணை இயக்குநர் ந.மகாலெட்சுமி தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com