ஜாமீனில் வெளிவந்தவர் கொலை சம்பவத்தில் மேலும் 3 பேர் சரண்

மதுரை அருகே ஜாமீனில் வெளிவந்தவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில். மேலும் மூவர் வெள்ளிக்கிழமை சரணடைந்தனர். 

மதுரை அருகே ஜாமீனில் வெளிவந்தவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில். மேலும் மூவர் வெள்ளிக்கிழமை சரணடைந்தனர். 
சிவகங்கை மாவட்டம் வேம்பத்தூரை அடுத்த மிக்கேல் பட்டணத்தை சேர்ந்த பிரசாந்த்,  2018 மார்ச் மாதம் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக நாகமலை புதுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த சிவமூர்த்தி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அண்மையில், ஜாமீனில் வெளியே வந்த சிவமூர்த்தியை ஜூலை 10-ஆம் தேதி அடையாளம் தெரியாத கும்பல் வெட்டிக் கொன்றது.  
இது குறித்து நாகமலை புதுக்கோட்டை போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்த சம்பவத்தில் பிரசாந்தின் சகோதரர் ஊர்காவலன் வியாழக்கிழமை 6 ஆவது குற்றவியல் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை சரணடைந்தார். 
இந்நிலையில், இந்த கொலை சம்பவத்திற்கு ஊர்காவலனுக்கு உதவியாக இருந்த நண்பர்கள் ரஞ்சித், விஷ்ணுகுமார், தினேஷ் ஆகிய மூன்று பேரும் மதுரை 6 ஆவது குற்றவியல் நீதித் துறை நடுவர் மன்றத்தில் வெள்ளிக்கிழமை சரணடைந்தனர். 3 பேரையும் வரும் 25 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதித் துறை நடுவர் உத்தரவிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com