பாலியல் புகார்: அறநிலையத் துறை இணை ஆணையர் பணியிடை நீக்கம்

பாலியல் புகாருக்குள்ளான இந்து சமய அற நிலையத்துறை இணை ஆணையர் பச்சையப்பன் வெள்ளிக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

பாலியல் புகாருக்குள்ளான இந்து சமய அற நிலையத்துறை இணை ஆணையர் பச்சையப்பன் வெள்ளிக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
 விருதுநகர் மாவட்டம் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் உள்ள இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான விடுதியின் குளியலறையில் கேமரா பொருத்தி படம் பிடித்ததாக, அறநிலையத்துறை இணை ஆணையர் (மதுரை) பச்சையப்பன் மீது உதவி பெண் ஆணையர் சாப்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸார் இணை ஆணையர் பச்சையப்பனை கைது செய்தனர். 
மேலும் இணை ஆணையர் பதவியிலிருந்தும் அவர் விடுவிக்கப்பட்டார். அப்பொறுப்பு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் இணை ஆணையர் ந.நடராஜனிடம் கூடுதல் பொறுப்பாக ஒப்படைக்கப்பட்டுள்ளது. 
இந்நிலையில், உதவி பெண் ஆணையர் அளித்த புகார் தொடர்பாக துறைரீதியான விசாரணை நடத்தப்பட்டு வந்தது. இந்த விசாரணை முடிவடைந்த நிலையில் இணை ஆணையர் பச்சையப்பனை பணியிடை நீக்கம் செய்து இந்து சமய அறநிலையத்துறை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com