மதுரையில் வெள்ளிக்கிழமை வீட்டின் பூட்டை உடைத்து 6 பவுன் நகைகள், ரூ. 22 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.
மதுரை சின்னக்கடை வீதியைச் சேர்ந்த அழகர்சாமி மனைவி ருக்மணி (60). இவர், வெள்ளிக்கிழமை மதியம் வீட்டைப் பூட்டி விட்டு, கடைக்குச் சென்றுள்ளார். இரவு வீடு திரும்பியபோது, கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. உள்ளே சென்று பார்த்த இவர், பீரோவில் இருந்த 6 பவுன் நகைகள் மற்றும் ரூ. 22 ஆயிரம் திருடப்பட்டிருப்பதை அறிந்தார்.
இது குறித்து ருக்மணி தெற்குவாசல் காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதன்பேரில், சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் விசாரணை நடத்தினர். மேலும், இது குறித்து வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.