ஏவி மேம்பாலத்தில் இருந்து குதித்து மனநலம் பாதித்தவர் தற்கொலை

மதுரையில் மனநலம் பாதிக்கப்பட்டவர்  ஏவி மேம்பாலத்திலிருந்து குதித்து புதன்கிழமை தற்கொலை செய்து கொண்டார்.


மதுரையில் மனநலம் பாதிக்கப்பட்டவர்  ஏவி மேம்பாலத்திலிருந்து குதித்து புதன்கிழமை தற்கொலை செய்து கொண்டார்.
ஏ.வி. மேம்பாலத்தில் இருந்து ஒருவர்  குதித்ததை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து, செல்லூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்து போலீஸார் பார்த்தபோது, அந்த நபர் பலத்த காயங்கள் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது தெரியவந்தது.
  இதையடுத்து தற்கொலை செய்துக் கொண்டவரின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 
இந்நிலையில்,  போலீஸார் நடத்திய விசாரணையில், உயிரிழந்தவர் ஆரப்பாளையம், சின்னச்சாமிபிள்ளை தெருவைச் சேர்ந்த ஜெயசந்திரன்(39) என்பது தெரியவந்தது. 
இவர் கடந்த 10 ஆண்டுகளாக மன நிலை சரியில்லாமல், அதற்கான மருத்துவம் பெற்று வந்ததும், அண்மையில் நோய்த் தாக்குதல் தீவிரமடைந்து வீதிகளில் சுற்றி வந்ததும் தெரியவந்துள்ளது.
இது குறித்து ஜெயசந்திரனின், தம்பி வைரமணி அளித்த புகாரின் பேரில் மதிச்சியம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com