உசிலம்பட்டி அருகே தொட்டணம்பட்டி கழுவுடையான் கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற கும்பாபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தொட்டணம்பட்டி கழுவுடையான் கோயிலில் உள்ள கழுவுடையான், சீலைக்காரி, சீனிவாசப் பெருமாள், கருப்பசாமி மற்றும் 21தெய்வங்களுக்கு கும்பாபிஷேக விழா செவ்வாய்க்கிழமை (ஜூன் 11) தொடங்கியது. இந்த விழாவையொட்டி செவ்வாய்க்கிழமை முதல் 4 கால பூஜைகள் நடைபெற்றன.
வியாழக்கிழமை யாகசாலை பூஜைகள் முடிந்து கடம்புறப்பாடு நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து விமான கலசத்திற்கு புனிதநீர் ஊற்றப்பட்டு, கும்பாபிஷேகம் நடைபெற்றது. யாகசாலை பூஜைகள் மற்றும் கும்பாபிஷேத்தை சின்னாளபட்டி கணேசன் சாஸ்திரிகள் தலைமையிலான குழுவினர் செய்தனர்.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.