மேலூர் திரெளபதி அம்மன் கோயிலில் தீமிதி திருவிழாவில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்று நேர்த்திக் கடன் செலுத்தி வழிபட்டனர்.
மேலூர் திரெளபதி அம்மன் கோயில் வைகாசி தீ மிதித் திருவிழா கடந்த வாரம் காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது.விழாவில் விரதம் மேற்கொண்ட பக்தர்கள் மேலூர் மண்கட்டித் தெப்பக்குளம் அருகில் சிறப்பு வழிபாடுகள் செய்தனர். அதைத் தொடர்ந்து திரெளபதி அம்மன் கோயிலில் வழிபட்டனர்.
பின்னர், பல்லக்கில் திரெளபதி அம்மன் வீதியுலா நகைக் கடை பஜார் வழியாக, பூக்குளித் திடல் வரை நடைபெற்றது. அங்கு செவ்வாய்க்கிழமை இரவு பூசாரியைத் தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக் கடன் செலுத்தி அம்மனை வழிபட்டனர். இதில் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனர்.