செவிலியர் தேர்வு: மதுரையில் 9,550 பேர் பங்கேற்பு
By DIN | Published On : 24th June 2019 09:11 AM | Last Updated : 24th June 2019 09:11 AM | அ+அ அ- |

மதுரையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற செவிலியர் தேர்வில் 9,550 பேர் பங்கேற்றனர்.
தமிழகம் முழுவதும் காலியாக உள்ள செவிலியர் பணியிடங்களுக்கான தேர்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தத் தேர்வுக்கு மதுரை மாவட்டத்தில் 12 ஆயிரம் பேர் விண்ணப்பித்திருந்தனர்.
இந்நிலையில் மதுரையில் 17 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை தேர்வு நடைபெற்றது. இதில் விண்ணப்பித்திருந்த 12 ஆயிரம் பேரில் 9,550 பேர் மட்டுமே தேர்வு எழுதினர். தேர்வு மையங்களை மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) எஸ்.சாந்தகுமார் மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டனர்.