தேசிய நீச்சல் போட்டி: மதுரை மாணவருக்கு 4 பதக்கங்கள்

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கான தேசிய அளவிலான நீச்சல் போட்டியில் 4 பதக்கங்களை வென்ற

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கான தேசிய அளவிலான நீச்சல் போட்டியில் 4 பதக்கங்களை வென்ற மதுரை மாணவருக்கு விளையாட்டுத்துறை அதிகாரிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
நாடு முழுவதும் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கான 50-ஆவது தேசிய அளவிலான நீச்சல் போட்டி புதுதில்லியில்  ஜூன் 17 முதல் 20 ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் நாடு முழுவதும் இருந்து 500 மாணவர்கள் பங்கேற்றனர். தமிழகத்தில் இருந்து 40 மாணவர்கள் பங்கேற்றனர். இந்நிலையில் மதுரை கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவர் பி.ஆர்.சந்துரு நீச்சல் போட்டிகளில் பங்கேற்று 4 பதக்கங்களை பெற்றார். இதையடுத்து மாணவர் சந்துருவுக்கு தமிழ்நாடு நீச்சல் சங்க துணைத் தலைவர் ஸ்டாலின் ஆரோக்கியராஜ், மதுரை மாவட்ட விளையாட்டு அலுவலர் மாலதி, நீச்சல் சங்க செயலர் கண்ணன், பயிற்சியாளர் பாஸ்கரன் ஆகியோர் பாராட்டு தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com