மதுரை நகர் பகுதியில் இன்று மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்

மதுரை மாநகரப் பகுதி மின்நுகர்வோருக்கான குறைதீர் கூட்டம் கோ.புதூரில் உள்ள மதுரை பெருநகர் மேற்பார்வைப்

மதுரை மாநகரப் பகுதி மின்நுகர்வோருக்கான குறைதீர் கூட்டம் கோ.புதூரில் உள்ள மதுரை பெருநகர் மேற்பார்வைப் பொறியாளர் அலுவலகத்தில் புதன்கிழமை (ஜூன் 26) நடைபெறுகிறது.
  சுப்பிரமணியபுரம், ஆரப்பாளையம், யானைக்கல், தமிழ்ச் சங்கம், டவுன்ஹால், மீனாட்சி அம்மன் கோயில், மாகாளிப்பட்டி, திருமலை நாயக்கர் மகால், ஜான்சி ராணி பூங்கா, அரசமரம், தெப்பம், முனிச்சாலை, அனுப்பானடி, சிந்தாமணி, கீழவாசல், தமுக்கம், ரேஸ்கோர்ஸ், செல்லூர், தாகூர் நகர், சொக்கிகுளம், திருப்பாலை, ஆத்திகுளம், ஆனையூர், கோ.புதூர், கே.கே.நகர், அண்ணா நகர், மேலமடை, அரசரடி, விளாங்குடி, பி.பி.சாவடி, ஞானஒளிவுபுரம், பழங்காநத்தம், எஸ்.எஸ்.காலனி, பசுமலை, திருப்பரங்குன்றம், டிவிஎஸ் நகர், ஜெய்ஹிந்த்புரம், ஜீவாநகர், வில்லாபுரம், அவனியாபுரம் ஆகிய மின்பிரிவுகளுக்கு உட்பட்ட மின்நுகர்வோர் இக் கூட்டத்தில் பங்கேற்று தங்களது குறைகளை நேரிலோ அல்லது மனுக்கள் மூலமாகவோ தெரிவிக்கலாம்.
மதுரை பெருநகர் மேற்பார்வை பொறியாளர் சி.வெண்ணிலா இத் தகவலைத் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com