மேலூர், கொட்டாம்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மாலை பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்தது.
மேலுர் பகுதிகளில் பகலில் கடும் வெயில் நிலவியது. மாலையில் பலத்த காற்று மற்றும் இடி மின்னலுடன் மிதமான மழைபெய்தது. காற்றில் பல இடங்களில் மரக் கிளைகள் முறிந்து விழுந்தன. இதனால் மின் கம்பிகள் பாதிக்கப்பட்டதால் பல பகுதிகளில் மின்சார விநியோகம் தடைப்பட்டது. இம்மழை சுமார் 45 நிமிடங்கள் பெய்தது. கடந்த சில தினங்களாக அதிக வெப்பம் நிலவி வந்தநிலையில், இம்மழை பெய்ததைத் தொடர்ந்து குளிர்ந்த சீதோஷண நிலை நிலவியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.