விலையில்லா மடிக்கணினி கோரி மாணவர்கள் மறியல்

உசிலம்பட்டியில் அரசுப் பள்ளி மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகளை சேர்ந்த  மாணவர்கள் விலையில்லா மடிக்கணிணி

உசிலம்பட்டியில் அரசுப் பள்ளி மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகளை சேர்ந்த  மாணவர்கள் விலையில்லா மடிக்கணிணி வழங்கக் கோரி செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
உசிலம்படியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் நாடார் சரஸ்வதி மேல்நிலைப் பள்ளிகளில் பிளஸ் 1, பிளஸ் 2 படிக்கும்  மாணவர்கள், 2018-19ஆண்டு பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு விலையில்லா  மடிக்கணிணி வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் அதற்கு முந்தைய ஆண்டு  2017-18 ஆம் ஆண்டு பிளஸ் 2 முடித்த  மாணவர்களுக்கு மடிக்கணிணி வழங்கப்படவில்லை. மடிக்கணினி வழங்கப்பட்டு வருவதை அறிந்த மாணவர்கள் செவ்வாய்க்கிழமை கல்லூரியிலிருந்து வகுப்புகளை புறக்கணித்து விட்டு உசிலம்பட்டி சென்றனர். அதன் பின்னர் தாங்கள் பயின்ற பள்ளிகளுக்குச் சென்று தங்களுக்கும் மடிக்கணினி வழங்கக் கோரிக்கை விடுத்துள்ளனர். 
அதற்கு மாவட்ட கல்வி நிர்வாகம் மூலம் அரசு எப்போது உங்களுக்கு மடிக்கணிணி வழங்குகிறதோ அப்போதுதான் வழங்க முடியும் என ஆசிரியர்கள் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. 
இதையடுத்து மாணவர்கள் ஏராளமானோர் உசிலம்பட்டியில் உள்ள தேவர்சிலை முன்பாக  திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அதிகாரிகள் மூலம் இது குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து மறியலைக் கைவிட்டு மாணவர்கள் கலைந்து சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com