முதியோர் இல்லத்தில் ரூ.50 ஆயிரம் திருட்டு

மதுரையில் முதியோர் இல்லத்தில் பூட்டு உடைக்கப்பட்டு ரூ.50 ஆயிரம் புதன்கிழமை திருடப்பட்டுள்ளது.

மதுரையில் முதியோர் இல்லத்தில் பூட்டு உடைக்கப்பட்டு ரூ.50 ஆயிரம் புதன்கிழமை திருடப்பட்டுள்ளது.
  மதுரை புறவழிச் சாலையில் உள்ள ஜெ.டி. நகரைச் சேர்ந்வர் சேசிலித் தெரஸ் (69). இவர் பொன்மேனி புனித அன்னாள் முதியோர் இல்லம் மற்றும் தட்டச்சுப் பயிற்சி மையத்தின் பொறுப்பாளராக உள்ளார்.  அங்கு தங்கியிருப்பவர்கள் காலை 5.50 மணிக்கு எல்லீஸ் நகர் தேவாலயத்துக்கு செல்வது வழக்கம். இந்நிலையில், சேசிலித் தெரஸ் உள்பட இல்லத்தில் தங்கியிருப்பவர்கள் அனைவரும் புதன்கிழமை தேவாலயம் சென்றுவிட்டு இல்லத்திற்கு திரும்பினர். சேசிலித் தெரஸ் தனது அறைக்கு சென்றபோது, கதவின் பூட்டு உடைக்கப்பட்டு பிரோவில் இருந்த ரூ.50 ஆயிரம், 3 வங்கிக் கணக்கு புத்தகங்கள் மற்றும் 2 எரிவாயு சிலிண்டர் பதிவுப் புத்தகங்களை யாரோ திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து சேசிலித் தெரஸ் அளித்தப் புகாரின் பேரில் எஸ்.எஸ்.காலனி போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com