கொட்டாம்பட்டி அருகே மஞ்சு விரட்டு: 10 பேர் காயம்

கொட்டாம்பட்டி அருகே ம.வெள்ளாளப்பட்டியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மஞ்சு விரட்டு நிகழ்ச்சியில்

கொட்டாம்பட்டி அருகே ம.வெள்ளாளப்பட்டியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மஞ்சு விரட்டு நிகழ்ச்சியில்  காளைகளைப் பிடிக்க முயன்ற 10-க்கு மேற்பட்ட இளைஞர்கள் காயமடைந்தனர்.
கிராமத்தில் உள்ள ஆண்டிக்கருப்பண சுவாமி கோயில் திருவிழாவையொட்டி இந்த மஞ்சு விரட்டு நடத்தப்பட்டது. கோயில் அருகிலுள்ள தொழுவத்தில் 100-க்கு மேற்பட்ட ஜல்லிக்கட்டு காளைகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. 
கிராமத்திலிருந்து வேஷ்டி, துண்டுகள் அடங்கிய ஜவுளி மூட்டைகளாகக் கட்டி கொண்டுவரப்பட்டு, காளைகளுக்கு விநியோகிக்கப்பட்டன. 
இதையடுத்து காளைகள் தொழுவத்திலிருந்து வெளியில் கொண்டுவரப்பட்டு திறந்த வெளியில் அவிழ்த்துவிடப்பட்டன. 
காளைகளைத் துரத்திப் பிடிக்க முயன்றதில் 10-க்கு மேற்பட்ட இளைஞர்கள் காயமடைந்தனர். அங்கு தயார் நிலையில் இருந்த மருத்துவக் குழுவினர் அவர்களுக்கு சிகிச்சை அளித்தனர். 
பாதுகாப்பு பணியில் கொட்டாம்பட்டி போலீஸார் ஈடுபட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com