ஆடு வாங்கச் சென்றவரிடம் ரூ.1.18 லட்சம் பறிமுதல்

மதுரை மாவட்டம் எஸ்.கொடிக்குளம் விலக்கில் ஆடு வாங்குவதற்காக சென்றவரிடம் ரூ.1.18 லட்சத்தை

மதுரை மாவட்டம் எஸ்.கொடிக்குளம் விலக்கில் ஆடு வாங்குவதற்காக சென்றவரிடம் ரூ.1.18 லட்சத்தை தேர்தல் அலுவலர்கள்  ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனர்.
மதுரை எஸ்.கொடிக்குளம் விலக்கு அருகே மதுரை கிழக்குத் தொகுதி பறக்கும்படையினர் ஞாயிற்றுக்கிழமை மாலை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே முருகன் என்பவர் ஓட்டி வந்த டெம்போ வாகனத்தை சோதனை செய்ததில் ரூ.1.18 லட்சம் இருப்பது தெரிய வந்தது. விசாரணையில் முருகன் ஆடு வாங்குவதற்காக பணம் கொண்டு செல்வதாக தெரிவித்தார்.
 இந்நிலையில் உரிய ஆவணங்கள் இல்லை என்பதால் அத்தொகையை தேர்தல் அலுவலர்கள் பறிமுதல் செய்து,  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கருவூலத் துறையினரிடம் ஒப்படைத்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com