'மக்களவைத் தேர்தலில் ஆதரவு யாருக்கு என்ற எனது நிலைப்பாட்டை ஒரு வாரத்துக்குப் பின்பு அறிவிப்பேன் என முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தெரிவித்தார்.
சென்னையிலிருந்து ஞாயிற்றுக்கிழமை மதுரை வந்த அவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மதுரை மக்களவை தொகுதியின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் சு.வெங்கடேசன் மரியாதை நிமித்தமாக சந்தித்தால், சந்திப்பேன் அதில் தவறில்லை. இத்தேர்தலில் திமுக வெற்றி குறித்து ஒருவாரத்துக்கு முன்பே தெரிவித்து விட்டேன். மக்களவைத் தேர்தலில் எனது ஆதரவு யாருக்கு என்ற எனது நிலைப்பாட்டை ஒருவாரத்துக்குப் பின்பு விரிவாக அறிவிப்பேன் என்றார்.