ஆடு வியாபாரியிடம் ரூ.63 ஆயிரம் பறிமுதல்

திருமங்கலத்தில் தேர்தல் பறக்கும்படையினர் வாகனச் சோதனையின்போது ஆடு வியாபாரியிடம் ரூ.63 ஆயிரத்தை வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனர்.  

திருமங்கலத்தில் தேர்தல் பறக்கும்படையினர் வாகனச் சோதனையின்போது ஆடு வியாபாரியிடம் ரூ.63 ஆயிரத்தை வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனர்.  
 திருமங்கலம்- உசிலம்பட்டி சாலையில் வட்டாட்சியர் சரவணன் தலைமையிலான அதிகாரிகள் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சரக்கு வாகனத்தில் உசிலம்பட்டி தொட்டப்பநாயக்கனூரைச் சேர்ந்த பால்ராஜ்(48) திருமங்கலம் ஆட்டுச் சந்தையில் ஆடு வாங்க வந்தாராம். 
அவரை நிறுத்திய பறக்கும்படையினர் அவரிடமிருந்த ரூ.63 ஆயிரத்திற்கு கணக்கு கேட்டனர். தான் இறைச்சிக் கடை வைத்திருப்பதாகவும், அதில் வரும் வருவாயைக் கொண்டுவந்து ஆடுவாங்க வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 
இதனை ஏற்காத பறக்கும்படையினர் பணத்தை பறிமுதல் செய்து திருமங்கலம் கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com