சென்னையிலிருந்து மதுரைக்கு வந்து கொண்டிருந்த தனியார் லாரியில் வெள்ளிக்கிழமை தார்ப்பாயைக் கிழித்து ரூ.4 லட்சம் மதிப்புள்ள மருந்து பெட்டிகளைத் திருடியவர்களை போலீஸார் தேடிவருகின்றனர்.
சென்னையிலிருந்து மதுரைக்கு வியாழக்கிழமை இரவு தனியார் நிறுவனத்தின் தலைவலி மருந்துபெட்டிகள் ஏற்றிய லாரி வந்துகொண்டிருந்தது. மதுரையைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் முருகன் லாரியை ஓட்டிவந்தார். வெள்ளிக்கிழமை அதிகாலையில் மேலூர் அருகே லாரி வந்துகொண்டிருந்தபோது, ஒரு கும்பல் தார்ப்பாயைக் கிழித்து லாரியிலிருந்த 45 பெட்டிகளை திருடியுள்ளனர்.
இதுகுறித்து லாரி ஓட்டுநர் முருகன் அளித்த புகாரின் பேரில் மேலூர் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.