திருப்பரங்குன்றத்தில் விருதுநகர் மக்களவையில் அதிமுக கூட்டணியில் தேமுதிக வேட்பாளர் அழகர்சாமி போட்டியிடுகிறார். அவரை அறிமுகப்படுத்தும் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்திற்கு அதிமுக மேற்கு புறநகர் மாவட்ட செயலர் வி.வி.ராஜன்செல்லப்பா தலைமை வகித்தார். எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலர் எம்.ரமேஷ், பொதுக்குழு உறுப்பினர் முத்துக்குமார், ஒன்றிய செயலர் ராமகிருஷ்ணன், துணைச்செயலர் நிலையூர்முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கட்சி நிர்வாகிகளிடம் வேட்பாளரை அறிமுகப்படுத்தி அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேசினார்.
கூட்டத்தில், அதிமுக அமைப்புச் செயலர் ம.முத்துராமலிங்கம், தேமுதிக மாவட்டச் செயலர் கணபதி, அதிமுக பகுதிச் செயலர்கள் பன்னீர்செல்வம், முனியாண்டி, தேமுதிக மாவட்ட துணைச்செ"யலர் கருப்பு வைரம், அருள் உள்ளிட்ட பாஜக, தமாக உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் ஏராளமானோர் பங்கேற்றனர்.
எடுபடாத கூட்டணி: மதுரை மக்களவைத் தொகுதி அதிமுக தேர்தல் அலுவலகத்தை கோ.புதூரில் வெள்ளிக்கிழமை திறந்து வைத்த அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, செய்தியாளர்களிடம் கூறியது:
பிரதமராக மீண்டும் நரேந்திர மோடி தான் வரவேண்டும் என்பது அனைத்துத் தரப்பு மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. ஆனால், திமுக அணியில் யார் பிரதமர் என்பதே குழப்பமாக உள்ளது. அந்த அணி மக்களிடம் எடுபடாத கூட்டணியாக உள்ளது என்றார்.