ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான சர்வதேச தடகளப் போட்டியில் மதுரை வீரர்கள் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனர்.
ஐக்கிய அரபு அமீரகம் சார்ஜா நகரில் மாற்றுத்திறனாளிகளுக்கான சர்வதேச தடகளப் போட்டிகள் அண்மையில் நடைபெற்றன. இந்தப் போட்டியில் 52-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து மாற்றுத்திறனாளி வீரர்கள் பங்கேற்றனர்.
இதில் மதுரையைச் சேர்ந்த கணேசன் வட்டு எறிதல், ஈட்டி எறிதலில் வெண்கலப் பதக்கமும், எஸ்.மனோஜ் குண்டு எறிதலில் வெண்கலமும்,
டி.குமார் வெண்கலப் பதக்கமும் பெற்று சாதனை புரிந்துள்ளனர். விளையாட்டு போட்டியில் சாதனை படைத்த வீரர்களுக்கு பாராட்டு விழா மதுரை
டாக்டர் எம்ஜிஆர் விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவில் மதுரை மாவட்ட விளையாட்டு அலுவலர் மாலதி பங்கேற்று சாதனை படைத்த வீரர்கள் மற்றும் அவர்களுக்கு பயிற்சியளித்த மாற்றுத்திறனாளிகளுக்கான தடகளப் பயிற்சியாளர் ஜே.ரஞ்சித்குமார் ஆகியோரை பாராட்டினார்.இதில் விளையாட்டு வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் பங்கேற்றனர்.