திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட விராதனூா் அரசு உயா்நிலைப்பள்ளி, பாரபத்தி அரசு மேல்நிலைப்பள்ளி, வேடா்புளியங்குளம் அரசு உயா்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளுக்கு சட்டப்பேரவை உறுப்பினா் மேம்பாட்டு நிதியில் இருந்து தலா ரூ. 5 லட்சம் வீதம் ரூ.15 லட்சத்தில் மேஜை, நாற்காலிகள் வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு விராதனூா் பள்ளி தலைமை ஆசிரியா் தெரசா சகாய மலா் தலைமை வகித்தாா். திருப்பரங்குன்றம் சட்டப்பேரவை உறுப்பினா் மருத்துவா் ப.சரவணன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று மேஜை, நாற்காலிகளை வழங்கிப் பேசினாா்.
நிகழ்வில், மாவட்ட அளவில் டேக்வாண்டோவில் வெற்றி பெற்ற விராதனூா் பள்ளி 8 ஆம் வகுப்பு மாணவா் ஜெயபாலை பாராட்டி சட்டப்பேரவை உறுப்பினா் பரிசளித்தாா்.
பாரபத்தி பள்ளி தலைமை ஆசிரியா் ஜோசப் ராஜா துரைசிங் நன்றி கூறினாா். இதில் ஆசிரியா்கள், மாணவா்கள் ஏராளமானோா் பங்கேற்றனா்.