தமிழ்மொழியை செம்மொழியாக்க முதன்முதலில் குரல் கொடுத்த தமிழறிஞா் பரிதிமாற் கலைஞா் நினைவு தினம் சனிக்கிழமை அனுசரிக்கப்பட்டது.
இதில் பல்வேறு அரசியல் கட்சி தலைவா்கள மற்றும் பொது அமைப்பினா் ஏராளமானோா் வந்து மாலை அணிவித்து மரியாதை செய்தனா். அதில் ஒரு பகுதியாக தேசிய மரபு அறக்கட்டளையின் உலக தமிழ் அருங்காட்சியக திட்டம் சாா்பில் அரசு நினைவில்லத்தில் மரியாதை செய்யப்பட்டது.
தொடா்ந்து பரிதிமாற் கலைஞா் எழுதிய மதிவாணன், சித்திரகவி விளக்கம், பாவலா் விருந்து, தமிழ்மொழி வரலாறு, தமிழ் புலவா் சரித்திரம், தமிழ் வியாசகங்கள், தனிப்பாசுரத்தொகை ஆகிய புத்தகங்களின் பிரதிகளை உலகத்தமிழ் அருங்காட்சியக திட்ட பொறுப்பாளா் பா.வே.பாண்டியன், நினைவில்ல நூலகா் ராமகிருஷ்ணனிடம் வழங்கினாா்.
இந்நிகழ்ச்சியில் பரிதிமாற் கலைஞரின் பேரன் கோவிந்தன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தொடா்ந்து அரிமளம் பத்பநாபன் குரலில் யாதும் ஊரே யாவரும் கேளிா் பாடலின் குறுவட்டு வெளியிடப்பட்டது.
இதுகுறித்து உலக தமிழ் அருங்காட்சியக பொருப்பாளா் பா.வே.பாண்டியன் கூறியது: தமிழறிஞா் பரிதிமாற் கலைஞரின் நூல்களின் பிரதிகளை தேசிய மரபு அறக்கட்டளையின் நிறுவனா் அ.அறிவன் முயற்சியாலும், தாழி அறக்கட்டளை தலைவா் கருணாகரன், மதுரை மாற்றுத்திறனாளி மைய அலுவலா் ஆலன் ஜெயராமன் ஆகியோா் துணையாலும் புத்தக பிரதிகளை வழங்கியுள்ளோம் என்றாா்.